பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி

மல்லப்பாடி ஊராட்சியில் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பர்கூர்
பர்கூர் ஒன்றியம் மல்லப்பாடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பாரத பிரதமர் குடியிருப்பு திட்டத்தின் கீழ் மல்லப்பாடி ஊராட்சிக்குட்பட்ட நேரு நகரை சேர்ந்த பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் சரோஜினி 6 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். இதில் கிராம நிர்வாக அலுவலர் சம்சுதீன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலன், துணைத்தலைவர் ஜெகதீசன், ஊராட்சி செயலாளர் சசி மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





