மனுநீதி நாள் சிறப்பு முகாம்


மனுநீதி நாள் சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 8 July 2023 12:15 AM IST (Updated: 8 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரம் அருகே ஆவுடையானூரில் மனுநீதி நாள் சிறப்பு முகாம் நடந்தது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே ஆவுடையானூரில் மனுநீதி நாள் சிறப்பு முகாம் நடந்தது. முகாமில் பொதுமக்கள் தங்களின் அடிப்படை தேவைகள் குறித்தும், விவசாயிகளின் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, ரேஷன் கார்டு உள்ளிட்ட பல்வேறு தேவைகள் குறித்து ஏராளமானோர் மனுக்களை கொடுத்தனர். இந்த மனுக்களை உதவி கலெக்டர் லாவண்யா, துணை கலெக்டர் ஷீலா ஆகியோர் பெற்றனர். நிகழ்ச்சியில் தாசில்தார் சுப்பையா, துணை தாசில்தார் சண்முகம் மற்றும் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஆவுடையானூர் பஞ்சாயத்து தலைவர் குத்தாலிங்கராஜன் செய்திருந்தார்.

1 More update

Next Story