உண்ணாவிரத போராட்டம்

விருதுநகரில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு பங்களிப்பு ஓய்வூதிய திட்ட (சிபிஎஸ்) ஒழிப்பு இயக்கத்தினர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனியாண்டி தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். கோரிக்கைகளை விளக்கி நிதி காப்பாளர் விக்னேஷ் பேசினார். அரசு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் லட்சுமி நாராயணன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். பல்வேறு அரசு அலுவலர் சங்க நிர்வாகிகள் வாழ்த்தி பேசினர். அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் கண்ணன் நிறைவுரையாற்றினார். போராட்டத்தின் போது தேர்தல் வாக்குறுதிப்படி தி.மு.க. அரசு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலுக்கு கொண்டுவர வேண்டும். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் ஊழியர்களுக்கு பணிக்கொடைத்தொகை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட்டது. முடிவில் தர்மராஜ் நன்றி கூறினார்.