பெண்ணுக்கு அரிவாள் வெட்டு; கணவர் கைது


பெண்ணுக்கு அரிவாள் வெட்டு; கணவர் கைது
x

பெண்ணுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக கணவர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

மானூர்:

மானூர் அருகே உள்ள ராமையன்பட்டியைச் சேர்ந்தவர் செல்லையா (வயது 42). இவருடைய மனைவி வெள்ளத்தாய் (32). தனியார் நிறுவன ஊழியர். இவரது வீட்டு நிகழ்ச்சிக்கு வெள்ளத்தாயின் தாயார் வந்துள்ளார். இதனை விரும்பாத செல்லையா தனது சகோதரர் பெருமாள் (50) மற்றும் அவரது மகன் வெள்ளப்பாண்டி ஆகியோருடன் சேர்ந்து வெள்ளத்தாயிடம் தகராறு செய்துள்ளார். அப்போது அருகில் கிடந்த அரிவாளை எடுத்து வெள்ளத்தாயை வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் கையில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்லையாவை கைது செய்தனர். மற்ற 2 பேரையும் தேடி வருகின்றனர்.


Next Story