மனைவியை தாக்கிய கணவர் கைது


மனைவியை தாக்கிய கணவர் கைது
x

மனைவியை தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டார்.

ராணிப்பேட்டை

நெமிலி

மனைவியை தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டார்.

ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட அருந்ததிபாளையத்தை சேர்ந்தவர் பரந்தாமன். அவரது மகன் டீக்கன் (வயது 21). இவருக்கும், சென்னையை ேசர்ந்த ஷர்மிளா (20) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் டீக்கன், ஷா்மிளாவை தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் நெமிலி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகேஷ் வழக்குப்பதிவு செய்து, டீக்கனை கைது செய்தார்


Next Story