பெண் கொலையில் கணவர் கைது


பெண் கொலையில் கணவர் கைது
x

உவரி அருகே பெண் கொலையில் கணவரை போலீசார் கைது செய்தனர்

திருநெல்வேலி

திசையன்விளை:

நெல்லை மாவட்டம் உவரி அருகே கூடுதாழையைச் சேர்ந்தவர் அகிலன் (வயது 38). மீனவர். இவருடைய மனைவி ரேஷ்மி (31). தையல் தொழிலாளி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் ரேஷ்மி கணவரிடம் கோபித்துக்கொண்டு குழந்தைகளுடன் தூத்துக்குடி மாவட்டம் மணப்பாட்டில் உள்ள பெற்றோரின் வீட்டுக்கு சென்றார்.

இதையடுத்து ரேஷ்மியை அவரது தாயார் சமாதானப்படுத்தி நேற்று மதியம் அவரை குழந்தைகளுடன் கூடுதாழையில் உள்ள கணவரின் வீட்டுக்கு அழைத்து வந்தார். பின்னர் ரேஷ்மியின் தாயார் மணப்பாட்டுக்கு திரும்பி சென்று விட்டார்.

தொடர்ந்து மாலையில் அகிலனுக்கும், ரேஷ்மிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த அகிலன் மனைவி என்றும் பாராமல் தையல் எந்திரத்தால் ரேஷ்மியின் தலையில் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் அகிலன் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

இச்சம்பவம் குறித்து உவரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வள்ளியூர் துணை சூப்பிரண்டு யோகேஷ்குமார் உத்தரவில் பேரில் போலீசார் தனிப்படை அமைத்து அகிலனை போலீசார் தேடி வந்தனர் இந்தநிலையில் நேற்று மாலை அவரை போலீசார் கைது செய்து உவரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் மனைவி ரேஷ்மி நடத்தையில் சந்தேகம் அடைந்து அவரை கொலை செய்தேன் என கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story