பெண்ணை மிரட்டிய கணவர் கைது


பெண்ணை மிரட்டிய கணவர் கைது
x

நெல்லை அருகே பெண்ணை மிரட்டிய கணவரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

நெல்லை அருகே சீவலப்பேரி பாலாமடையை சேர்ந்தவர் பண்டாரம் என்ற பாஸ்கர் (வயது 25). தொழிலாளி. இவருடைய மனைவி அபி. இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று பண்டாரம் என்ற பாஸ்கர் அதே பகுதியில் உள்ள அபியின் தந்தையான இருளப்பன் (52) மற்றும் அபியை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்த புகாரின் பேரில் சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து பண்டாரம் என்ற பாஸ்கரை கைது செய்தனர்.

1 More update

Related Tags :
Next Story