நான் விஜயலட்சுமியிடம் 2010-க்குப் பிறகு பேசியது கிடையாது- சீமான் விளக்கம்


நான் விஜயலட்சுமியிடம் 2010-க்குப் பிறகு பேசியது கிடையாது- சீமான் விளக்கம்
x

"நான் விஜயலட்சுமியிடம் 2010-க்குப் பிறகு பேசியது கிடையாது. 13 ஆண்டுகள் ஆகிவிட்டது. சும்மா சொல்லிவிட்டு சென்றுள்ளார் என்று சீமான் தெரிவித்துள்ளர்.

சென்னை,

சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், நடிகை விஜயலட்சுமி, சீமானுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதாக கூறியது பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த சீமான், " நிறைய பொய்கள் சொல்லும்போது அதை ஒரு பொய்யாக கூறிச் சென்றுள்ளார். நான் விஜயலட்சுமியிடம் 2010-க்குப் பிறகு பேசியது கிடையாது. 13 ஆண்டுகள் ஆகிவிட்டது. சும்மா சொல்லிவிட்டு சென்றுள்ளார். விஜயலட்சுமி எல்லாவற்றையும் பதிவு செய்து வருகிறாரே, நான் பேசியதாக கூறுவதை ஏன் பதிவிடவில்லை? சமரசம் என்பது என்னுடைய சரித்திரத்திலேயே கிடையாது. அப்படி செய்ய வேண்டிய அவசியமும் கிடையாது" என்றார்.


Next Story