ஜெயங்கொண்டம் மக்கள் நீதிமன்றத்தில் 201 நில ஆர்ஜித வழக்குகளுக்கு உடனடி தீர்வு


ஜெயங்கொண்டம் மக்கள் நீதிமன்றத்தில் 201 நில ஆர்ஜித வழக்குகளுக்கு உடனடி தீர்வு
x

ஜெயங்கொண்டம் மக்கள் நீதிமன்றத்தில் 201 நில ஆர்ஜித வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் பழுப்பு நிலக்கரி மற்றும் அனல்மின் திட்டத்திற்காக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் கையகப்படுத்திய நிலங்களை அந்தந்த நில உரிமையாளரிடம் ஒப்படைக்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்து இருந்தது. அந்த அரசாணையின் அடிப்படையில் உரிய உரிமையாளர்களிடம் நிலப்பட்டா வழங்க ஜெயங்கொண்டம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் மூலம் நேற்று மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது. அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான கிறிஸ்டோபர் உத்தரவின் பேரில், அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் அழகேசன் மக்கள் நீதிமன்றத்தை தலைமை தாங்கி நடத்தினார். இதில் 201 நில ஆர்ஜித வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு உரிய நில உரிமையாளர்களுக்கு நிலப்பட்டாவை மாற்றிக் கொடுக்க மக்கள் நீதிமன்ற ஆணை பிறப்பிக்கப்பட்டது. மக்கள் நீதிமன்றத்தில் ஜெயங்கொண்டம் தனி தாசில்தார் (நிலம் எடுப்பு) வேலுமணி, தேவகி, அரசு வக்கீல்கள் மோகன்ராஜ், செந்தில்குமார் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story