வடசென்னை அனல்மின் நிலையத்தில் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு


வடசென்னை அனல்மின் நிலையத்தில் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
x

பழுது மற்றும் பராமரிப்பு பணிகள் காரணமாக வடசென்னை அனல்மின் நிலையத்தில் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் வடசென்னை அனல்மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு முதல் யூனிட்டில் உள்ள 3 அலகுகளில் தலா 210 விதம் 630 மெகாவாட், 2-வது யூனிட்டில் இரண்டு அலகுகளில் தலா 600 விதம் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

இதில் முதல் யூனிட்டில் ஏற்பட்ட கொதிகலன் குழாய் பழுது காரணமாக, 2-வது யூனிட் மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் 2-வது யூனிட்டில் இன்று பராமரிப்பு பணிகளுக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால், அங்கு 1,200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்படும் என அனல்மின் நிலைய பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story