அரசு பஸ் சிறைப்பிடிப்பு


அரசு பஸ் சிறைப்பிடிப்பு
x
தினத்தந்தி 5 Oct 2023 7:45 PM GMT (Updated: 5 Oct 2023 7:45 PM GMT)

திண்டுக்கல் அருகே அரசு பஸ்சை சிறைப்பிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல்லில் இருந்து கோபால்பட்டி வழியாக மொட்டயகவுண்டன்பட்டி கிராமத்திற்கு அரசு டவுன் பஸ் ஒன்று தினமும் 6 தடவை இயக்கப்படுகிறது. இந்த டவுன் பஸ் கடந்த சில நாட்களாக முறையாக இயக்கப்படுவதில்லை என்று கிராம மக்கள் புகார் கூறி வந்தனர். இதனால் மொட்டையகவுண்டன்பட்டி, வேம்பார்பட்டி பகுதிகளில் இருந்து திண்டுக்கல்லுக்கு செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று காலை 9 மணி அளவில் மொட்டயகவுண்டன்பட்டிக்கு வந்த அரசு டவுன் பஸ்சை அப்பகுதி பொதுமக்கள், மாணவர்கள் சிறைப்பிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த வேம்பார்பட்டி ஊராட்சி தலைவர் கந்தசாமி, போக்குவரத்து கழக அதிகாரிகள், போலீசார் ஆகியோர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் கிராமத்துக்கு டவுன் பஸ் சரியான நேரத்தில் முறையாக இயக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story