சென்னையில் விமானப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை...!


சென்னையில் விமானப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை...!
x

சென்னையில் விமானப்படை வீரர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ஆவடி,

சென்னையை அடுத்த ஆவடியில் இந்திய விமானப்படை பயிற்சி தளம் உள்ளது. இங்கு விமானப்படை வீரர்களுக்கான பயிற்சி மையம் மற்றும் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னை, ஆவடி விமானப்படை தளத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த குஜராத்தை சார்ந்த நீரோ பை ஷோவன் என்ற விமானப்படை வீரர் திடீரென தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு உயர் அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து முத்தாபுதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விமானப்படை வீரர் நீரோ பை ஷோவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாதுகாப்பு பணியின்போது விமானப்படை வீரர், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆவடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story