சென்னையில் கடந்த ஆண்டைவிட 20 சதவீதம் கொலைகள் குறைந்துள்ளது - போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால்


சென்னையில் கடந்த ஆண்டைவிட 20 சதவீதம் கொலைகள் குறைந்துள்ளது - போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால்
x

சென்னையில் கடந்த ஆண்டைவிட 20 சதவீதம் கொலைகள் குறைந்துள்ளது என்று போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னையில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் குற்றங்கள் நடைபெற்று தான் வருகிறது. குற்றத்தைத் தடுக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். சென்னையில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 20% சதவீதம் மரணங்கள் குறைந்துள்ளது. மாவா, குட்கா விற்பனை செய்வதைத் தடுத்து அதனை பறிமுதல் செய்துள்ளோம்.

கல்லூரி மாணவர்களுக்குத் தொடர்ந்து அறிவுரைகள் வழங்கி வருகிறோம். அதையும் மீறி மாணவர்கள் ஆயுதங்களை எடுத்தால் கைது செய்து சிறையில் அடைப்போம்.

சென்னையில் விபத்துகளைக் குறைக்க விபத்து குறித்து போக்குவரத்து போலீசார், சென்னை மாநகராட்சி, சென்னனை ஐஐடி இணைந்து ஆய்வு செய்து அறிக்கை தயாரித்தது. அதன்பின் அந்தப் பகுதியில் விபத்துகளைக் குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story