ஈரோடு மாவட்டத்தில்19 லட்சத்து 43 ஆயிரத்து 912 வாக்காளர்கள்;இறுதி பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்


ஈரோடு மாவட்டத்தில்19 லட்சத்து 43 ஆயிரத்து 912 வாக்காளர்கள்;இறுதி பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்
x

கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டு உள்ள இறுதி வாக்காளர் பட்டியலின்படி, ஈரோடு மாவட்டத்தில் 19 லட்சத்து 43 ஆயிரத்து 912 வாக்காளர்கள் உள்ளனர்.

ஈரோடு

கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டு உள்ள இறுதி வாக்காளர் பட்டியலின்படி, ஈரோடு மாவட்டத்தில் 19 லட்சத்து 43 ஆயிரத்து 912 வாக்காளர்கள் உள்ளனர்.

இறுதி வாக்காளர் பட்டியல்

கடந்த 1-ந் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலை திருத்துவதற்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு வசதியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 9-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டார். அன்றைய தினமே ஈரோடு மாவட்டத்திலும் 8 சட்டமன்ற தொகுதிகளில் உள்ளடக்கிய வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டார்.

அதனைத்தொடர்ந்து வாக்காளர் பட்டியல் திருத்த பணி தொடங்கியது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தங்களை மேற்கொள்ள வாய்ப்புகள் வழங்கப்பட்டன. அதற்கான சிறப்பு முகாம்கள் விடுமுறை நாட்களில் நடத்தப்பட்டன. வாக்காளர் பட்டியல் உடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான விண்ணப்பங்களும் பெறப்பட்டன. வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் கடந்த டிசம்பர் மாதம் 8-ந்தேதி முடிவடைந்தன. இந்த காலகட்டத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலித்து இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

கலெக்டர் வெளியிட்டார்

இந்த நிலையில் நேற்று தமிழக முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் ஈரோடு மாவட்டத்துக்கான இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 5-ந்தேதி வெளியிடப்பட்ட பட்டியலின்படி ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 19 லட்சத்து 87 ஆயிரத்து 244 வாக்காளர்கள் இருந்தனர். இதில் புதிதாக வாக்காளர் பட்டியலில் 29 ஆயிரத்து 240 பேர் சேர்க்கப்பட்டனர். 30 ஆயிரத்து 908 பேர் பல்வேறு காரணங்களால் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.

ஈரோடு கிழக்கு -மேற்கு

இதைத்தொடர்ந்து 5.1.2023 நாளை கணக்கிட்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், பவானிசாகர் ஆகிய 8 சட்ட தொகுதிகளையும் சேர்த்து இறுதி வாக்காளர் பட்டியலில் மொத்தம் 19 லட்சத்து 43 ஆயிரத்து 912 பேர் உள்ளனர். மாவட்ட முழுவதும் மொத்தம் 2 ஆயிரத்து 222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 52 இடங்களில் 238 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இதில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 713 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 16 ஆயிரத்து 140 பென் வாக்காளர்களும், 23 மூன்றாம் பாலின வாக்காளர்களும், 22 ராணுவ வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 898 வாக்காளர்கள் உள்ளனர்.

ஈரோடு மேற்கு தொகுதியில் மொத்தம் 302 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு மேற்கு தொகுதியில் 101 இடங்களில் 302 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு 1 லட்சத்து 45 ஆயிரத்து 202 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 52 ஆயிரத்து 16 பெண் வாக்காளர்களும், 40 மூன்றாம் பாலின வாக்காளர்களும், 42 ராணுவ வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 97 ஆயிரத்து 300 வாக்காளர்கள் உள்ளனர். ஈரோடு மேற்கு தொகுதி தான் மாவட்டத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட தொகுதியாக உள்ளது.

மொடக்குறிச்சி -பெருந்துறை

மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 147 இடங்களில் 277 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 1 லட்சத்து 9 ஆயிரத்து 675 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 19 ஆயிரத்து 221 பெண் வாக்காளர்களும், 13 மூன்றாம் பாலின வாக்காளர்களும், 31 ராணுவ வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 28 ஆயிரத்து 940 வாக்காளர்கள் உள்ளனர்.

பெருந்துறை தொகுதியில் 153 இடங்களில் 264 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இங்கு 1 லட்சத்து 11 ஆயிரத்து 358 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 18 ஆயிரத்து 739 பெண் வாக்காளர்களும், 8 மூன்றாம் பாலின வாக்காளர்களும், 19 ராணுவ வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 30 ஆயிரத்து 124 வாக்காளர்கள் உள்ளனர்.

பவானி -அந்தியூர்

பவானி தொகுதியில் 122 இடங்களில் 289 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 1 லட்சத்து 15 ஆயிரத்து 961 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 20 ஆயிரத்து 474 பெண் வாக்காளர்களும், 17 மூன்றாம் பாலின வாக்காளர்களும், 57 ராணுவ வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 36 ஆயிரத்து 509 வாக்காளர்கள் உள்ளனர்.

அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் 122 இடங்களில் 261 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இதில் 1 லட்சத்து 5 ஆயிரத்து 113 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 8 ஆயிரத்து 573 பெண் வாக்காளர்களும், 17 மூன்றாம் பாலின வாக்காளர்களும், 61 ராணுவ வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 13 ஆயிரத்து 764 வாக்காளர்கள் உள்ளனர்.

கோபி -பவானிசாகர்

கோபிசெட்டிபாளையம் தொகுதியில் 127 இடங்களில் 296 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 1 லட்சத்து 21 ஆயிரத்து 331 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 31 ஆயிரத்து 814 பெண் வாக்காளர்களும், 9 மூன்றாம் பாலின வாக்காளர்களும், 25 ராணுவ வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 53 ஆயிரத்து 179 வாக்காளர்கள் உள்ளனர்.

பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் 127 இடங்களில் 295 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இங்கு 1 லட்சத்து 25 ஆயிரத்து 306 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 32 ஆயிரத்து 128 பெண் வாக்காளர்களும், 21 மூன்றாம் பாலின வாக்காளர்களும், 18 ராணுவ வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 57 ஆயிரத்து 473 வாக்காளர்கள் உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் 951 இடங்களில் 2 ஆயிரத்து 222 வாக்குச்சாவடி மையங்களில் 9 லட்சத்து 44 ஆயிரத்து 659 ஆண் வாக்காளர்களும், 9 லட்சத்து 99 ஆயிரத்து 105 பெண் வாக்காளர்களும், 148 மூன்றாம் பாலின வாக்காளர்களும், 275 ராணுவ வாக்காளர்களும் என மொத்தம் 19 லட்சத்து 44 ஆயிரத்து 187 வாக்காளர்கள் உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் ஆண் வாக்காளரை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.


Related Tags :
Next Story