கோபி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்


கோபி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
x
தினத்தந்தி 14 Jun 2023 3:16 AM IST (Updated: 14 Jun 2023 12:15 PM IST)
t-max-icont-min-icon

கோபி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது.

ஈரோடு

கோபி

கோபி புதுப்பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருடைய மகன் தீனதயாளன் (வயது 22). டிரைவர். கோபி அருகே உள்ள வேட்டைக்காரன் கோவில் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகள் கலைவாணி (22). இவர் கோபியில் உள்ள ஒரு நகைக்கடையில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.

தீனதயாளனும், கலைவாணியும் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இவர்களுடைய காதலுக்கு 2 பேரின் பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி பண்ணாரி அம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதைத்தொடர்ந்து தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரி கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து 2 பேரின் பெற்றோர்களையும் போலீசார் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story