கருங்கல்பாளையம் சந்தையில் பசு மாடு ஒன்று ரூ.85 ஆயிரத்துக்கு விற்பனை


கருங்கல்பாளையம் சந்தையில் பசு மாடு ஒன்று ரூ.85 ஆயிரத்துக்கு விற்பனை
x

கருங்கல்பாளையம் சந்தையில் பசு மாடு ஒன்று ரூ.85 ஆயிரத்துக்கு விற்பனையானது.

ஈரோடு

கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தையில் பசு மாடு ஒன்று ரூ.85 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது.

மாட்டுச்சந்தை

ஈரோடு கருங்கல்பாளையத்தில் வாரந்தோறும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மாட்டுச்சந்தை கூடி வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் நடந்த சந்தைக்கு 100-க்கும் மேற்பட்ட கன்றுக்குட்டிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இவைகள் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விலை போனது.

இந்த நிலையில் நேற்று வழக்கமான சந்தை கூடியது. இந்த சந்தைக்கு ஈரோடு, கரூர், சேலம், கோவை, நாமக்கல், திருப்பூர், திண்டுக்கல் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தங்களது மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். 400 பசுமாடுகள், 300 எருமை மாடுகள் என மொத்தம் 700 மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.

ரூ.85 ஆயிரம்

இதில் பசு மாடு ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.85 ஆயிரம் வரையும், எருமை மாடு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.65 ஆயிரம் வரையும் விற்பனை ஆனது.

தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, மராட்டியம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கிசென்றனர்.


Related Tags :
Next Story