கோவில்பட்டியில்பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்


கோவில்பட்டியில்பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Aug 2023 6:45 PM GMT (Updated: 7 Aug 2023 6:46 PM GMT)

கோவில்பட்டியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி நகரசபை அலுவலகம் முன்பு நேற்று காலையில் 20-வது வார்டு பகுதியில் அசுத்தமான தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டதை கண்டித்தும், சுகாதாரமான குடிநீர் வினியோகிக்க வலியுறுத்தி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டுகலைந்து சென்றனர்.


Next Story