வாணியம்பாடி: இலவச புடவைகள் வழங்கும் நிகழ்ச்சியில் நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழப்பு


வாணியம்பாடி: இலவச புடவைகள் வழங்கும் நிகழ்ச்சியில் நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழப்பு
x
தினத்தந்தி 4 Feb 2023 10:50 AM GMT (Updated: 4 Feb 2023 12:17 PM GMT)

வாணியம்பாடியில் இலவச புடவைகள் வழங்கும் நிகழ்ச்சியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்தனர்.

வேலூர்

தைப்பூசத்தை முன்னிட்டு வாணியம்பாடியில் ஜின்னா பாலம் அருகே தனியார் நிறுவனம் சார்பில் இலவச வேட்டி சேலைகள் வழங்குவதற்கு டோக்கன் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அங்கு ஆயிரகணக்கான பெண்கள் குவிந்தனர். இதில் கூட்ட நெரிசலில் பல மயங்கி விழுந்தனர். அப்போது கூட்ட நெரிசலில்சிக்கி 4 பெண்கள் உயிரிழந்து உள்ளனர்.

மேலும் காயமடைந்த 10க்கும் மேற்பட்ட பெண்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.


Next Story