கீழ்பவானி வாய்க்காலில்தண்ணீர் திறப்பு அதிகரிப்பு


கீழ்பவானி வாய்க்காலில்தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
x

கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2,300 கன அடி தண்ணீர் பாசனத்துக்காக திறந்து விடப்பட்டது. இந்தநிலையில் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு கடந்த 2 நாட்களுக்கு முன்பு வினாடிக்கு 500 கன அடியாக குறைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலை 8 மணி முதல் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக திறக்கப்பட்ட தண்ணீர் வினாடிக்கு 1,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.


Next Story