அம்மனுக்கு மண்சட்டியில் அசைவ உணவு படைத்து வழிபாடு


அம்மனுக்கு மண்சட்டியில் அசைவ உணவு படைத்து வழிபாடு
x
தினத்தந்தி 12 Oct 2023 12:15 AM IST (Updated: 12 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மானாமதுரையில் மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி எல்லை பிடாரி அம்மனுக்கு கிராம மக்கள் அசைவ உணவு சமைத்து வழிபாடு நடத்தினர்.

சிவகங்கை

மானாமதுரை

சாட்டுதல் விழா

மானாமதுரை அண்ணாசிலை அருகே மானாமதுரையின் எல்லை தெய்வமான எல்லைப்பிடாரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் புரட்டாசியில் செவ்வாய் சாட்டுதல் விழா கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இந்தாண்டு செவ்வாய் சாட்டுதல் விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவை முன்னிட்டு மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் கிராமத்தார்கள் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காப்புக்கட்டி விரதம் இருந்து வருகின்றனர்.

இதையொட்டி புது மண் சட்டிகளில் பணியாரம், கொழுக்கட்டையுடன் அசைவ உணவுகளை தங்களது வீடுகளில் தயாரித்தனர்.

அசைவ உணவு

மேலும், மண்சட்டியில் தீப்பந்தம் விளக்கு ஏற்றி, விளக்கு அணையாமல் மக்கள் மானாமதுரை பழைய பஸ் நிலையம் பகுதியில் இருந்து நகரின் முக்கிய வீதிகளின் வழியே ஊர்வலமாக வந்தனர். பின்னர் அவற்றை அம்மனுக்கு படைத்து வழிபாடு நடத்தினர்.

இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிேஷகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. அப்போது சில பெண்கள் அருள் வந்து சாமி ஆடினர். விழாவில் கிருஷ்ணராஜபுரம் கிராமத்தை சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story