போடியில்பூட்டிய வீட்டில் கிடந்த பெண் பிணம்


போடியில்பூட்டிய வீட்டில் கிடந்த பெண் பிணம்
x
தினத்தந்தி 11 Sep 2023 6:45 PM GMT (Updated: 11 Sep 2023 6:46 PM GMT)

போடியில் பூட்டிய வீட்டில் பெண் பிணம் கிடந்தது.

தேனி

போடி வடக்கு ராஜ வீதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 58). இவர் தனியாக வசித்து வந்தார். உத்தமபாளையத்தைச் சேர்ந்த அவரது அக்காள் மகன் முத்துக்குமரன் (38) என்பவர் விஜயலட்சுமியை பராமரித்து வந்தார். கடந்த 7-ந்தேதி முத்துக்குமரனின் தந்தை விஜயலட்சுமி வீட்டிற்கு வந்தார். பின்னர் அவர் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து விட்டு சென்றார். இதையடுத்து அவர் கடந்த 9-ந்தேதி விஜயலட்சுமியை செல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால் செல்போனை யாரும் எடுக்கவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த முத்துக்குமரன் தனது தந்தையுடன் நேற்று காலை விஜயலட்சுமியின் வீட்டிற்கு வந்தார். அப்போது வீடு பூட்டி கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டுக்குள் விஜயலட்சுமி பிணமாக கிடந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் போடி நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் உடல்நலக்குறைவால் இறந்தாரா அல்லது வேறு யாரேனும் கொலை செய்தார்களா என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story