திருவண்ணாமலையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்


திருவண்ணாமலையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
x

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை கோர்ட்டு அருகே வேலூர் சாலையில் திருவண்ணாமலை பார் அசோசியேஷன், அட்வகேட் அசோசியேஷன், லாயர் அசோசியேசன், மகளிர் லாயர் அசோசியேசன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு வக்கீல் கண்ணன் தலைமை தாங்கினார். வக்கீல்கள் முத்தையன், நாககுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

இதில் வக்கீல்கள் பாசறைபாபு, அபிராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story