திருச்செந்தூரில் உதவிகலெக்டர் அலுவலகத்தை பரமன்குறிச்சி மக்கள் முற்றுகை


திருச்செந்தூரில்  உதவிகலெக்டர் அலுவலகத்தை பரமன்குறிச்சி மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 15 Sep 2023 6:45 PM GMT (Updated: 15 Sep 2023 6:47 PM GMT)

திருச்செந்தூரில் உதவிகலெக்டர் அலுவலகத்தை பரமன்குறிச்சி மக்கள் முற்றுகையிட்டு பேராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அருகே பரமன்குறிச்சி தோட்டத்தார்விளை பகுதியில் பல்வேறு ேகாரிக்கைகளை வலியுறுத்தி ஊர்த்தலைவர் மாடசாமி தலைமையில் கிராமமக்கள் நேற்று திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அரசின் இலவச பஸ்பாஸ் இருந்தும் பள்ளி, கல்லூரி சென்று வரும் நேரங்களில் டவுண் பஸ் இல்லாதாதல் திருச்செந்தூரிலிருந்து சாத்தான்குளம் அரசு மகளிர் கல்லூரி வரை சென்று வர டவுண் பஸ் இயக்க வேண்டும்.

தோட்டாத்தார்விளை தெருவில் உள்ள டிரான்ஸ்பார்மரை இடமாறுதல் செய்ய வேண்டும். பரமன்குறிச்சி பஜாரில் போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும்.பஜார் பகுதியில் நிழற்குடை வசதி ஏற்படுத்த வேண்டும். ஆதிதிராவிட மக்களுக்கு இலவச வீட்டுமனை மற்றும் சமுதாய கூடம் அமைத்து தர வேண்டும். குடியிருப்பு அருகில் அரசு புறம்போக்கு நிலத்தில் மயானபூமி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனுவை உதவி கலெக்டர் குருசந்திரனிடம் வழங்கிவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story