தூத்துக்குடியில்வீட்டுவசதி வாரிய குடியிருப்பில்ஆசிரியர் தினவிழா


தூத்துக்குடியில்வீட்டுவசதி வாரிய குடியிருப்பில்ஆசிரியர் தினவிழா
x
தினத்தந்தி 7 Sept 2023 12:15 AM IST (Updated: 7 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் ஆசிரியர் தினவிழாகொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி எட்டயபுரம் ரோடு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மகளிர் நல மன்றம் சார்பில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு ஆசிரியை மாரியம்மாள் தலைமை தாங்கி வரவேற்று பேசினார். செயலாளர் காமாட்சி முன்னிலை வகித்தார். வக்கீல் விஜயசுந்தர், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சம்பத் சாமுவேல் ஆகியோர் பாராட்டி பேசினர். விழாவில் ஆசிரியர் பணியுடன் சமூக பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு மன்ற தலைவர் மைதிலி செல்வராஜ் விருதுகளை வழங்கி பாராட்டினார். சிறப்பு அழைப்பாளராக அமுதா கலந்து கொண்டு பேசினார். விழாவில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மகளிர் நல மன்ற பொருளாளர் பத்மலதா, துணைத்தலைவர் சாந்தி, பல்டாக்டர் மேகலா உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் பாலகுருசாமி நன்றி கூறினார்.

1 More update

Next Story