தொடர்மழையால் வாலாஜா தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


தொடர்மழையால் வாலாஜா தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x

தொடர்மழையால் வாலாஜா தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

ராணிப்பேட்டை

தொடர்மழையால் வாலாஜா தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் வாலாஜாவில் உள்ள அணைக்கட்டு தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் இங்கிருந்து பாசன ஏரிகளுக்கு வினாடிக்கு 1350 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அதன்படி காவேரிப்பாக்கம் பெரிய ஏரிக்கு 280 கன அடி, மகேந்திரவாடி ஏரிக்கு 270 கன அடி, சக்கரமல்லூர் ஏரிக்கு 110 கன அடி, தூசி ஏரிக்கு 692 கன அடி என்ற விகிதத்தில் உபரி நீரை வெளியேற்றி வருகின்றனர்.

அணைக்கட்டு தடுப்பணையில் இருந்து தண்ணீர் செல்வதால் பாசன ஏரிகளுக்கு செல்லும் ஓடைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அதன் கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கலெக்டர் வளர்மதி அறிவுறுத்தியுள்ளார்.


Next Story