பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - நீர்மட்டம் 102 அடியாக உயர்வு


பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - நீர்மட்டம் 102 அடியாக உயர்வு
x

அணைக்கு வரும் 6,200 கன அடி தண்ணீர் அப்படியே உபரியாக பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

ஈரோடு,

நீலகிரி மலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் எதிரொலியாக ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் முழு கொள்ளளவான 105 அடியில் தற்போது 102 அடி வரை நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

இதனால் அணைக்கு வரும் 6,200 கன அடி தண்ணீர் அப்படியே உபரியாக பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. நீர்வரத்து உயர்வு காரணமாக பவானி அணை நீர்மட்டம் ஒரு மாதத்திற்கு மேலாக 102 அடியிலேயே நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story