காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை; ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரம் கனடியாக அதிகரிப்பு


காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை; ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரம் கனடியாக அதிகரிப்பு
x

கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

தர்மபுரி:

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து கேரளா மாநிலத்தின் வயநாடு மற்றும் கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.

அணையின் பாதுகாப்பு கருதி கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து 2500 கன அடி தண்ணீரும் கபினி அணையிலிருந்து 1500 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் தர்மபுரி மாவட்ட ஒகேனக்கலுக்கு நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது. நேற்று ஒகேனக்கலுக்கு 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் போன்றவற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

மேலும் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நீர்வரத்தை தமிழக கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.


Next Story