ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு எள் வரத்து அதிகரிப்பு


ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு எள் வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 20 May 2023 12:15 AM IST (Updated: 20 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு எள் வரத்து அதிகரிப்பு விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

கடலூர்

விருத்தாசலம்

விருத்தாசலம் பகுதியில் எள் அறுவடை நடைபெற்று வருகிறது. இதனால் விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு எள் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

அந்த வகையில் நேற்று மட்டும் 80 கிலோ எடையுள்ள ஒரு மூட்டை அதிகபட்சமாக ரூ.12 ஆயிரத்து 139-க்கும், குறைந்த விலையாக ரூ. 9 ஆயிரத்து 389-க்கும் விலைபோனது. எதிர்பார்த்த அளவில் விலை கிடைத்ததால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

இதேபோன்று குறிஞ்சிப்பாடியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கும் எள் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. நேற்று இங்கு ஒரு மூட்டை ரூ.11 ஆயிரத்து 400-க்கும், பண்ருட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ. 9 ஆயிரத்து 229-க்கும் எள் மூட்டைகள் விலை போனது.

1 More update

Next Story