முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது

தேனி

தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை திகழ்கிறது. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 135.15 அடியாக இருந்தது. நீர்வரத்து வினாடிக்கு 2,831 கன அடியாகவும், வெளியேற்றம் வினாடிக்கு 1866 கன அடியாகவும் இருந்தது.

இதற்கிடையே இன்று அதிகாலையில் இருந்தே நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. அதன்படி மாலை 3 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 135.70 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 6,143 கன அடியாக உயர்ந்து உள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டும் நிலையில் உள்ளது


Next Story