நீர்வரத்து அதிகரிப்பு: புழல், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து இன்று மாலை நீர் திறப்பு..!


நீர்வரத்து அதிகரிப்பு: புழல், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து இன்று மாலை நீர் திறப்பு..!
x

தொடர்மழை காரணமாக புழல், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வட மாவட்டங்களில் தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. சென்னையில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது.

தொடர்மழை காரணமாக சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், நீர்வரத்து அதிகரித்துள்ளதால் திருவள்ளூர் மாவட்டம் புழல் நீர்த்தேக்கத்தில் இருந்து இன்று பிற்பகல் 3 மணிக்கு வினாடிக்கு 100 கன அடி உபரி நீர் திறக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஏரிக்கு நீர்வரத்து 2000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் உபரிநீர் கால்வாய் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதைபோல செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு 100 கனஅடி நீர் வெளியேற்றப்படும் என்று மாவட்ட கலெக்டர் ஆர்த்தி அறிவித்துள்ளார். தொடர் மழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,180 கன அடியாக உள்ளது.


Next Story