2047-ல் இந்தியா வல்லரசாகும் - எல்.முருகன் பேச்சு


2047-ல் இந்தியா வல்லரசாகும் - எல்.முருகன் பேச்சு
x
தினத்தந்தி 28 Feb 2024 5:30 AM GMT (Updated: 28 Feb 2024 5:31 AM GMT)

தமிழ்நாட்டிற்கு பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் அளித்து வருகிறார் என்று எல்.முருகன் கூறினார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி தொடங்கியது. நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி, மத்திய இணை மந்திரி எல். முருகன் பங்கேற்றுள்ளனர். மேலும், தூத்துக்குடி எம்.பி. கனிமொழியும் பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில், ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். விழாவில் பிரதமர் மோடிக்கு செங்கோல் வழங்கப்பட்டது.

முன்னதாக விழாவில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் பேசியதாவது:-

பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை கொண்டு வருகிறார். 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு மட்டும் ரூ.11 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை கொண்டு வந்துள்ளார். 2047-ல் இந்தியா வல்லரசு நாடாக மாறும். 2047-ல் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக இருப்பதற்காக பிரதமர் மோடி பணியாற்றி வருகிறார் என்றார்.


Next Story