சக்கர நாற்காலி கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி - கேப்டன் வினோத் பாபுவிற்கு முதல்-அமைச்சர் நேரில் பாராட்டு

ராமநாதபுரத்தைச் சேர்ந்த வினோத் பாபு சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
சென்னை,
மாற்றுத்திறனாளிகளுக்கான 20 ஓவர் உலகக்கோப்பை சக்கர நாற்காலி கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் வினோத் பாபுவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டினார்.
ராமநாதபுரத்தைச் சேர்ந்தவரான வினோத் பாபு, சென்னை தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்து முதல்-அமைச்சரை சந்தித்து, அவரிடம் வெற்றிக் கோப்பையை காண்பித்து வாழ்த்து பெற்றார். அப்போது பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





