தர்மபுரி ஏல அங்காடிக்கு பட்டுக்கூடுகள் வரத்து குறைந்தது


தர்மபுரி ஏல அங்காடிக்கு பட்டுக்கூடுகள் வரத்து குறைந்தது
x
தினத்தந்தி 12 Oct 2022 7:45 PM GMT (Updated: 12 Oct 2022 7:45 PM GMT)

தர்மபுரி ஏல அங்காடிக்கு பட்டுக்கூடுகள் வரத்து குறைந்தது.

தர்மபுரி


தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள்.

இந்த அங்காடிக்கு நேற்று பட்டுக் கூடுகள் வரத்து வழக்கத்தை விட குறைந்தது. விவசாயிகள் 468 கிலோ பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

நேற்று அதிகபட்சமாக ரூ.740- க்கும், குறைந்தபட்சமாக ரூ.580-க்கும், சராசரியாக ரூ.617.43- க்கும் பட்டுக் கூடுகள் விற்பனையானது. மொத்தம் ரூ.3 லட்சத்து 26 ஆயிரத்து 884 மதிப்பில் பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.


Next Story