தீ விபத்தில் காயமடைந்தபி.எஸ்.என்.எல். ஊழியர் சாவு


தீ விபத்தில் காயமடைந்தபி.எஸ்.என்.எல். ஊழியர் சாவு
x
தினத்தந்தி 31 Jan 2023 12:15 AM IST (Updated: 31 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் தீ விபத்தில் காயமடைந்த பி.எஸ்.என்.எல். ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

தேனி

தேனி சுப்பன்தெரு ராகவன் காலனியை சேர்ந்தவர் நத்தர் பாட்ஷா (வயது 70). இவர் பி.எஸ்.என்.எல். ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 21-ந்தேதி இவர் தனது வீட்டின் முன்பு, பிளாஸ்டிக் குழாயை தீயில் வாட்டுவதற்காக ஒரு பாட்டிலில் இருந்த பெட்ரோலை ஊற்றினார். அப்போது அருகில் இருந்த எரி்ந்து கொண்டிருந்த தீ எதிர்பாராத விதமாக அவர் மீது பரவியது. இதில் அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. சிகிச்சைக்காக அவர் தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இதுகுறித்து அவருடைய மகன் சுருளிமஸ்தான் கொடுத்த புகாரின் பேரில் தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story