லாரிகள் மோதல்; டிரைவர்கள் படுகாயம்


லாரிகள் மோதல்; டிரைவர்கள் படுகாயம்
x
தினத்தந்தி 25 Oct 2023 7:30 PM GMT (Updated: 25 Oct 2023 7:30 PM GMT)

தொப்பூர் கணவாயில் லாரிகள் மோதி கொண்ட விபத்தில் டிரைவர்கள் படுகாயம் அடைந்தனர்.

தர்மபுரி

நல்லம்பள்ளி:

தொப்பூர் கணவாயில் லாரிகள் மோதி கொண்ட விபத்தில் டிரைவர்கள் படுகாயம் அடைந்தனர்.

லாரிகள் மோதல்

மராட்டிய மாநிலத்தில் இருந்து மக்காசோளம் பாரம் ஏற்றி கொண்டு ஒரு லாரி திருச்சி மாவட்டம் முசிறிக்கு புறப்பட்டது. இந்த லாரியை சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த டிரைவர் மணி (வயது 28) என்பவர் ஓட்டி வந்தார். மாற்று டிரைவராக வடிவேல் (32) உடன் வந்தார். இந்த லாரி தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் வழியாக நேற்று முன்தினம் வந்து கொண்டு இருந்தது.

அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையில் தாறுமாறாக ஓடி முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர்கள் மணி, வடிவேல் ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து காரணமாக தொப்பூர் கணவாய் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தீவிர சிகிச்சை

இதுகுறித்து தொப்பூர் போலீஸ் நிலையத்திற்கும், சுங்கச்சாவடி ரோந்து படைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து டிரைவர்களை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் போலீசார் விபத்துக்குள்ளான லாரிகளை பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர். விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story