இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 10-12-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 10 Dec 2025 8:11 PM IST
பிரதமர் மோடி பாதி நாட்கள் வெளிநாட்டில்தான் இருக்கிறார் - பிரியங்கா காந்தி பதிலடி
நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பியுமான ராகுல் காந்தி வருகிற 15-ம் தேதி ஜெர்மனி செல்கிறார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும் நேரத்தில் அவர் வெளிநாடு செல்வதை பாஜக விமர்சித்தது. வெளிநாட்டு நாயகன் என்று குறிப்பிட்டு விமர்சனம் செய்தது.
இதற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளரும் ராகுல் காந்தியின் சகோரியுமான பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
அவர் நிருபர்களிடம் கூறும்பொது,
பிரதமர் தனது வேலை நேரத்தில் கிட்டத்தட்ட பாதி நாட்களில் வெளிநாடுகளிலேயே செலவிடுகிறார், இருக்கிறார். எதிர்க்கட்சி தலைவரின் வெளிநாட்டு பயணம் குறித்து கேள்வி எழுப்புவது ஏன்? என்றார்.
- 10 Dec 2025 7:59 PM IST
ஜெர்மனிக்கு 15-ந்தேதி பயணம்: ராகுல்காந்தி வெளிநாட்டு நாயகன் - பாஜக விமர்சனம்
நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி வருகிற 15-ந்தேதி ஜெர்மனி புறப்பட்டு செல்கிறார். 20-ந்தேதி வரை அவர் ஜெர்மனியில் இருப்பார்.இந்திய காங்கிரசின் அயல நடத்தும் விழாவில் ராகுல்காந்தி பங்கேற்கிறார். வருகிற 17-ந்தேதி அவர் பெர்லினில் புலம் பெயர்ந்த இந்தியர்களை சந்திக்கிறார்.
அதோடு ஐரோப்பிய நாடுகளில் உள்ள அனைத்து காங்கிரஸ் வெளிநாட்டு தலைவர்களையும் ராகுல் காந்தி சந்தித்து பேசுகிறார். வெளிநாடு வாழ் இந்த யர்கள் சந்திக்கும் பிரச்சினைகள், அயலக காங்கிரசில் அதிக அளவில் உறுப்பினர்களை இணைப்பது, அமைப்பை வலுப்படுத்துவது. உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை நடத்துகிறார். இந்த பயணத்தின் போது ஜெர்மனி மந்திரிகளையும் ராகுல்காந்தி சந்திக்கிறார். அவருடன் காங்கிரசின் அயலக அணி தலைவர் சாம் பிட்ரோவும் உடன் செல்கிறார்.
- 10 Dec 2025 7:58 PM IST
பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டால் தேர்தலை நடத்த தயார்: ஜெலன்ஸ்கி பேச்சு
உக்ரைன் நாட்டுக்கு எதிராக 3 ஆண்டுகளுக்கு முன் ரஷியா போர் தொடுத்தது. தொடக்கத்தில் பல நகரங்களை ரஷியா கைப்பற்றியது. எனினும், அவற்றை உக்ரைன் படைகள் மீட்டன. உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் ஆயுதங்கள் மற்றும் நிதியுதவி ஆகியவற்றை செய்து வருகின்றன.
ரஷியாவுக்கு, நட்பு நாடான வடகொரியா, ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி மறைமுக உதவி செய்கிறது என கூறப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பேசும்போது, உக்ரைனின் ஜனநாயகம் பற்றி கேள்வி எழுப்பியதுடன், உக்ரைன் தலைவர் ஜெலன்ஸ்கி தேர்தலை நடத்தாமல், போரை மன்னிப்புக்கான ஒன்றாக பயன்படுத்தி கொள்கிறார் என கூறினார்.
- 10 Dec 2025 7:24 PM IST
வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் 16-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - தேர்தல் கமிஷன்
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது நடைபெற்று வரும் கணக்கீட்டு காலம் நாளையுடன் நிறைவடைகிறது. வரைவு வாக்காளர் பட்டியலானது சிறப்புத் தீவிர திருத்தப்பணி கால அட்டவணைப்படி நிர்ணயிக்கப்பட்ட தேதியான வருகிற 16-ந்தேதி அன்று வெளியிடப்படுகிறது.
வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கு முன் வெளிப்படைத் தன்மையை உறுதிசெய்ய வாக்காளர் பதிவு அலுவலர் நிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் கூ ட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
- 10 Dec 2025 6:49 PM IST
அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வரும் 12ம் தேதி பாமகவினர் ஆர்ப்பாட்டம் - ராமதாஸ்
சமூக நீதியை வென்றெடுக்க நடைபெறும் அறப்போராட்டத்திற்கு சென்னையில் நான் தலைமை ஏற்கிறேன். பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, செயல் தலைவர் ஸ்ரீ காந்தி மற்றும் முக்கிய நிர்வாகிகள் முன்னிலை வகிக்கிறார்கள். இதேபோல் தமிழ்நாடு முழுவதும் எல்லா மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் போராட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமையில் முன்பே அறிவித்துள்ளவாறு மாநில பொறுப்பாளர்கள் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள் தலைமை ஏற்பார்கள்.
இந்த போராட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள எங்களது மாநில, மாவட்ட, ஒன்றிய, மாநகர, பகுதி, வட்ட, நகர, பேரூர் பொறுப்பாளர்கள் செயல்வீரர்கள், இளைஞர்கள், பெண்கள் அதிக அளவில் பங்கேற்பார்கள். சமூகநீதியில் அக்கறை உள்ளவர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றும் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெறும் போராட்டத்தில் சமூகநீதியை வென்றெடுக்க பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
- 10 Dec 2025 6:30 PM IST
ரெயிலில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகையா? மத்திய மந்திரி அளித்த பதில்
மூத்த குடிமக்களுக்கு ரெயில் டிக்கெட்டில் சலுகைகள் வழங்கும் திட்டம் எதுவும் உண்டா? என்பது பற்றிய அவருடைய கேள்விக்கு பதிலளித்த மத்திய மந்திரி வைஷ்ணவ், வளர்ச்சியடைந்த நாடுகளில் வசூல் செய்யப்படும் டிக்கெட் கட்டணத்தில் 5 முதல் 10 சதவீதம் அளவுக்கே இந்தியாவில் ரெயில்வே கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றார்.
நம்முடைய அண்டை நாடுகளுடன் ஒப்பிட்டால் கூட மிக மிக குறைவான அளவிலேயே நம் நாட்டில் டிக்கெட் கட்டணம் உள்ளது என்றார். கடந்த ஆண்டு, இந்திய ரெயில்வே ரூ.60 ஆயிரம் கோடி மானியம் வழங்கியது. இதனால், குறைந்த கட்டணம் செலுத்தி செல்ல கூடிய அளவில் பயணிகளின் போக்குவரத்து அமைந்திருந்தது என்றார்.
- 10 Dec 2025 6:01 PM IST
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணி: முக்கிய ரெயில் சேவைகளில் மாற்றம்
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக, டிசம்பர் 15, 2025 முதல் பிப்ரவரி 03, 2026 வரை சில முக்கிய ரெயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
- 10 Dec 2025 5:34 PM IST
பிரசாந்த் கிஷோர், தேஜஸ்வி யாதவிடம் 2 வாக்காளர் அட்டைகள்: அமித்ஷா குற்றச்சாட்டு
நாடாளுமன்ற மக்களவையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் நடைபெற்று வரும் எஸ்.ஐ.ஆர். பணிகள் பற்றி பேசினார். அப்போது அவர், பிரசாந்த் கிஷோர், தேஜஸ்வி யாதவிடம் 2 வாக்காளர் அட்டைகள் இருந்தன என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.
- 10 Dec 2025 5:09 PM IST
மணல் கொள்ளை - நடவடிக்கை எடுக்க வேண்டும் - கனிம வள ஆணையருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
தமிழ்நாட்டில் மணல் கொள்ளையை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டின் சொத்துகளான கனிம வளங்களை கொள்ளையடிக்க அனுமதிக்க முடியாது.மணல் கொள்ளையை தடுப்பதற்கு குறிப்பிட்ட நடவடிக்கைகள் எடுத்திருந்தாலும் அது போதுமானதாக இல்லை என கனிம வள ஆணையருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
- 10 Dec 2025 5:06 PM IST
இயல்பு நிலைக்கு திரும்புகிறோம் - இண்டிகோ நிறுவனம்
நாங்கள் மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்புகிறோம்.விமான இயக்கத்தையும், தொழில்நுட்ப பிரச்சினையும் சரி செய்ய முயற்சிக்கிறோம். இண்டிகோவின் சிக்கல்களை சரிசெய்யும் பணியில் 65,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். விமான சேவைகள் பாதிப்பு தொடர்பாக இண்டிகோ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.















