காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி உயிரிழந்த வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்?


காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி உயிரிழந்த வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்?
x
தினத்தந்தி 12 Jun 2022 4:07 PM GMT (Updated: 12 Jun 2022 4:26 PM GMT)

சென்னை,

சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட திருவள்ளூர் மாவட்டம் அலமாதி பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்ற அப்புவுக்கு இன்று திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கொடுங்கையூர் காவல் நிலையத்தில் இருந்த போலீசார் ராஜசேகரை அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் மருத்துவர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி கூறியுள்ளனர். இதையடுத்து ராஜசேகரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ராஜசேகர் உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், காவல் நிலையத்தில் விசாரணைக்கைதி உயிரிழந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, விசாரணைக்கைதி ராஜசேகர் மரணம் அடைந்தது தொடர்பாக மாஜிஸ்திரேட்டு விசாரணைக்கும் சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story