நல்லம்பள்ளி அருகேஇலங்கை தமிழர் வீடுகள் கட்டுமான பணிகளை கலெக்டர் ஆய்வு

நல்லம்பள்ளி:
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே டொக்குபோதனஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட சந்தனூரான்கொட்டாய் பகுதியில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் இலங்கை தமிழர் மறுவாழ்வு குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.
இந்த குடியிருப்பு கட்டுமான பணிகளை நேற்று மாவட்ட கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் வீடுகளின் தரம், பணியின் தற்போதைய நிலைபாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லோகநாதன், ஆறுமுகம் மற்றும் துறைசார்ந்த அலுவலர், ஊராட்சி நிர்வாகத்தினர் உடன் இருந்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





