ராணிப்பேட்ைட உள்பட 4 மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு


ராணிப்பேட்ைட உள்பட 4 மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
x

ராணிப்பேட்ைட உள்பட 4 மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்த உள்ளார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்ைட உள்பட 4 மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்த உள்ளார்.

வேலூர் வருகை

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றும் (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) என 2 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதன்படி இன்று காலை 10.20 மணிக்கு சென்னையில் இருந்து ஷீரடி எக்ஸ்பிரஸ் ரெயிலில் புறப்பட்டு 12.10 மணி அளவில் காட்பாடி ரெயில் நிலையத்துக்கு வருகிறார்.

அவருக்கு வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் அமைச்சர் துரைமுருகன், நந்தகுமார் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.

அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் அரசு விழாவில் அவர் கலந்து கொள்கிறார்.

விழாவில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு, குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் 196 சட்டமன்ற தொகுதிகளில் 2 ஆயிரத்து 381 ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 5 ஆயிரத்து 351 புதிய வகுப்பறைகள் ரூ.784 கோடி மதிப்பில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டத்தில் 55 பள்ளிகளில் ரூ.15 கோடியே 96 லட்சத்தில் புதிய கட்டிட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

வி.ஐ.டி. பல்கலைக்கழகம்

விழா முடிந்ததும் அவர் தனியார் ஓட்டலில் ஓய்வெடுக்கிறார். அப்போது வேலூர் மாவட்டத்தை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசுகிறார். விவசாய சங்க பிரதிநிதிகளுடன் சந்திப்பு நிகழ்ச்சியில் விவசாயிகள் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுகிறார்.

இதனைத் தொடர்ந்து வேலூர் மாநகராட்சி பகுதியில் 'கள ஆய்வில் முதல்வர்' திட்டத்தை ஆய்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பின்னர் மாலை 5 மணி அளவில் வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்திற்கு செல்கிறார். அங்கு கலைஞர் கருணாநிதி பெயரில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தையும், ஆராய்ச்சி கட்டிடத்தையும் திறந்து வைத்து பேசுகிறார்.

விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், காந்தி, வி.ஐ.டி. வேந்தர் விசுவநாதன் கலந்து கொள்கின்றனர்.

சட்டம்-ஒழுங்கு குறித்து ஆய்வு

விழா முடிந்ததும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வருகிறார். அங்கு காவல்துறை அதிகாரிகளுடன் சட்டம்-ஒழுங்கு குறித்த ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது. இதில் வடக்கு மண்டல ஐ.ஜி. டாக்டர் கண்ணன், வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துச்சாமி, போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜேஷ்கண்ணன் (வேலூர்), டாக்டர் கார்த்திகேயன் (திருவண்ணாமலை), டாக்டர் பாலகிருஷ்ணன் (திருப்பத்தூர்), டாக்டர் தீபா சத்யன் (ராணிப்பேட்டை) உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். பின்னர் மீண்டும் தனியார் ஓட்டலில் சென்று தங்குகிறார்.

அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம்

அதனை தொடர்ந்து 2-வது நாளாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர்களுடன் பல்வேறு துறைகளின் சார்பில் நடைபெறும் மற்றும் நடைபெற உள்ள வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

முன்னதாக 'கள ஆய்வில் முதல்வர்' என்ற திட்டத்தின் கீழ் ஏதேனும் ஒரு பகுதிக்கு சென்று ஆய்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள இடங்கள் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் தூய்மை பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவரின் வருகையையொட்டி வேலூர், காட்பாடி பகுதியில் சாலையின் இருபுறமும் கட்சியினர் திரண்டு நின்று வரவேற்பு அளிக்க கட்சி சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 2 நாள் சுற்றுப்பயணத்தில் சில மாற்றங்கள் மற்றும் திடீர் ஆய்வுகள் இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

2 -வது நாள் ஆய்வுக்கு பின்னர் மாலை 6.40 மணிக்கு ஆழப்புழாவில் இருந்து தன்பாத் செல்லும் பொக்காரோ எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.


Next Story