சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் போகி பண்டிகையை கொண்டாட அறிவுறுத்தல்


சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் போகி பண்டிகையை கொண்டாட அறிவுறுத்தல்
x

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் போகி பண்டிகையை கொண்டாட அறிவுறுத்தப்பட்டது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் மூர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்து வருகின்றனர். குப்பைகளை தங்கள் பகுதிக்கு வரும் தூய்மை பணியாளர்களிடம் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என தரம் பிரித்து தர வேண்டும், போகிப் பண்டிகை அன்று குப்பைகளை தீயிட்டு கொளுத்தி சுற்றுச்சூழல் கேடு விளைவிக்கும் செயல்களில் பொதுமக்கள் யாரும் ஈடுபட வேண்டாம். வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் சேகரமாகும் குப்பைகளை பொது இடங்களில் கொட்டாமல் நகராட்சி தூய்மை பணியாளர்களிடம் கொடுத்து போகி பண்டிகையை புகையில்லாமல் சுகாதாரமான முறையில் கொண்டாட அனைவரும் நகராட்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும் நகராட்சி விதிமுறைகளை மீறுபவர்கள் மீது மேல் நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story