ஆதார் விவரங்களை பதிவேற்றம் செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்


ஆதார் விவரங்களை பதிவேற்றம் செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
x

ஆதார் விவரங்களை பதிவேற்றம் செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அரியலூர்

பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டிற்கு 3 தவணைகளில் ரூ.2 ஆயிரம் வீதம் மொத்தமாக ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 13 தவணைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 14-வது தவணை பி.எம்.கிசான் திட்டப்பலனை பெற விவசாயிகள் தங்களது ஆதார் விவரங்களை பி.எம்.கிசான் வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். தங்களது வங்கி கணக்கினை நேரடி பணப்பரிமாற்றம் செய்வதற்கு ஏதுவாக மாற்றம் செய்திட வேண்டும். தங்களது ஆதார் விவரங்களை பதிவேற்றம் செய்ய தவறிய மற்றும் வங்கி கணக்கினை நேரடி பண பரிமாற்றம் செய்ய தவறிய விவசாயிகளுக்கு 14-வது தவணை மற்றும் அதனை தொடர்ந்து வரும் தவணைகள் வழங்கப்படாது. எனவே விவசாயிகள் தங்களது ஆதார் விவரங்களை பதிவேற்றம் செய்ய அருகில் உள்ள இ-சேவை மையங்கள் அல்லது தபால் நிலையங்களை அணுகி உடனடியாக பதிவேற்றம் செய்திட வேண்டும்.

மேலும், விவசாயிகள் தாமாகவே பி.எம். கிசான் செயலி மூலம் முக அடையாளத்தை பயன்படுத்தி பதிவேற்றம் செய்து கொள்ளலாம். நேரடி பணப்பரிமாற்றம் செய்வதற்கு ஏதுவாக வங்கி கணக்கினை மாற்றுவதற்கு தங்களது வங்கி கணக்கு உள்ள சம்பந்தப்பட்ட வங்கி கிளைகளை அணுகி மேற்கூறிய செயல்முறையை செய்திட அறிவுறுத்தப்படுகிறது. அல்லது இந்தியா போஸ்ட் வங்கிகளை அணுகி அந்த வங்கிகளில் புதிய வங்கி கணக்குகளை உருவாக்கிட வேண்டும். இதுவரை பெரம்பலூர் மாவட்டத்தில் 9 ஆயிரத்து 635 விவசாயிகள் தங்களது ஆதார் விவரங்களை பதிவேற்றம் செய்யாமல் உள்ளனர். மேலும் 3 ஆயிரத்து 964 பயனாளிகள் நேரடி பணப்பரிமாற்ற முறைக்கு தங்கள் வங்கி கணக்கை மாற்றாமல் உள்ளனர். மேற்கூறிய குறைபாடுகளை சரிசெய்து விவசாயிகள் பி.எம்.கிசான் திட்டப்பலனை தொடர்ந்து பெற்று பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.


Next Story