ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்கள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்


ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்கள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
x

வேளாண்மை விரிவாக்க மையங்கள் உள்ளிட்ட கட்டடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

சென்னை,

வேளாண்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள் உள்ளிட்ட கட்டடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக இந்த திட்டங்களை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.

இதன்படி ஆய்வக கூடங்கள், தோட்டக்கலை தகவல் மற்றும் பயிற்சி மையம், வேளாண் வணிக மையங்கள், வேளாண்மை பொறியியல் பயிற்சி மையக் கட்டடம், பல்நோக்கு அரங்கம், தாமிரபரணி நதிநீர் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளன.


Next Story