டெங்கு ஒழிப்பு பணி தீவிரம்


டெங்கு ஒழிப்பு பணி தீவிரம்
x

டெங்கு ஒழிப்பு பணி தீவிரமாக நடைபெற்றது.

கரூர்

தோகைமலை ஒன்றியம், புத்தூர் ஊராட்சி பகுதிகளில் டெங்கு ஒழிப்பு பணி நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் தனிக்காசலம் தலைமை தாங்கினார். இதில் சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டு, ஒவ்வொரு தெருக்களில் உள்ள வீதிகள், பள்ளிகள், பொது இடங்கள் போன்ற பகுதிகளில் கிடந்த பிளாஸ்டிக் கப்புகள், டயர்கள், தேங்காய் ஓடுகளில் தேங்கி நின்ற மழைநீரை அகற்றினர். மேலும், ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று குடிநீர் தொட்டிகளை பரிசோதனை செய்து மருந்துகளை தெளித்தனர். இதில் சுகாதார ஆய்வாளர்கள், தோகைமலை வட்டார கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story