பண பரிவர்த்தனை சேவைகளை வழங்க மொபைல் பே நிறுவனத்துக்கு இடைக்கால தடை - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு


பண பரிவர்த்தனை சேவைகளை வழங்க மொபைல் பே நிறுவனத்துக்கு இடைக்கால தடை - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
x

பண பரிவர்த்தனை சேவைகளை வழங்க மொபைல் பே நிறுவனத்துக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

வணிக சின்னம் பிரச்சனை தொடர்பாக போன் பே நிறுவனம் தொடர்ந்த வழக்கில், பண பரிவர்த்தனை சேவைகளை வழங்க மொபைல் பே நிறுவனத்துக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக போன் பே நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், தங்களுடைய நிறுவனத்தின் வணிகச் சின்னத்தைப் போல, மொபைல் பே நிறுவனத்தின் வணிகச் சின்னம் இடம்பெற்றிருக்கிறது. அதனால் மொபைல் பே நிறுவனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், மொபைல் பே செயலியின் லோகோவும் போன் பே செயலியின் லோகோவைப் போல் இருப்பதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி சுந்தர் விசாரித்தார். இரு செயலிகளுடைய வணிக சின்னமும் லோகோவும் முழுமையாக ஒரே மாதிரியாக இல்லாவிட்டாலும் கூட, சாதாரண பொதுமக்களுடைய பார்வையில் அதைப் பார்க்கும்போது, அவை இரண்டும் ஒரே தோற்றத்தில் இருப்பதற்கான முகாந்தரங்கள் இருக்கின்றன என்று கூறிய நீதிபதி அதனால், மொபைல் பே நிறுவனம் பண பரிவர்த்தனை சேவைகளை மேற்கொள்ளக்கூடாது என்று இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டார்.

மேலும் மொபைல் பே செயலியில் பணம் சேர்ப்பது உள்ளிட்ட பிற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று அனுமதித்த நீதிபதி, இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து நீக்குவது தொடர்பான கோரிக்கை குறித்து பதிலளிக்குமாறு கூகுள் நிறுவனத்திற்கும் ஆப்பிள் நிறுவனத்திற்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளி வைத்திருக்கிறார்.


Next Story