சர்வதேச தடகள போட்டி: கோவை மாணவி பதக்கம் வென்று சாதனை...!
பிரான்சில் நடைபெற்ற சர்வதேச தடகள போட்டியில் கோவை மாணவி பதக்கம் வென்று சாதனை படைத்து உள்ளார்.
கோயம்புத்தூர்
சர்வதேச அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான தடகள போட்டி பிரான்சு நாட்டில் நடைபெற்றது. இதில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்றவர்களுக்கு ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், மும்முறை தாண்டுதல், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல் என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் கோவையை சேர்ந்த தனியார் பள்ளி பிளஸ்-2 மாணவி திவ்யாஸ்ரீ மும்முறை தாண்டும் போட்டியில் பங்கேற்று 12.22 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
சாதனை படைத்த மாணவியை பயிற்சியாளர் நந்தகுமார், ராஜேஷ் கண்ணன் மற்றும் கோவை தடகள சங்க நிர்வாகிகள், சக மாணவிகள் பாராட்டினர்.
Related Tags :
Next Story