சர்வதேச யோகா தினம்: யோகா நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்பு


சர்வதேச யோகா தினம்: யோகா நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்பு
x

சர்வதேச யோகா தினத்தையொட்டி யோகா நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.

சிதம்பரம்,

சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் 21-ந்தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 9-வது சர்வதேச யோகா தினம் இன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பல்வேறு யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்திருந்த யோகா நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு மாணவர்களுடன் சேர்ந்து யோகா செய்தார். நெல்லை, பாளையங்கோட்டையில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் யோகாசன நிகழ்வில் பங்கேற்று யோகா செய்தனர்.

அதேபோல் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் ராணுவ வீரர்களும் லடாக் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் யோகா செய்து சர்வதேச யோகா தினத்தை கொண்டாடினர்.


Next Story