என்ஜினீயரிங் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு நேர்முக தேர்வு


என்ஜினீயரிங் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு நேர்முக தேர்வு
x

என்ஜினீயரிங் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு நேர்முக தேர்வு நடந்தது.

அரியலூர்

வி.கைகாட்டி:

விளாங்குடியை அடுத்துள்ள அரியலூர் அண்ணா பல்கலைக்கழக என்ஜினீயரிங் கல்லூரியில் வளாக நேர்முகத் தேர்வு நடந்தது. இதில் கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர். நேர்முக தேர்வில் தனியார் நிறுவனத்தின் பணிக்கு சுமார் 30 மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் செந்தமிழ்செல்வன் தலைமை தாங்கினார். கல்லூரியின் வேலை வாய்ப்பு அதிகாரி அருண்பிரகாஷ் மற்றும் பேராசிரியர்கள் மூலம் இந்த நேர்முக தேர்வு நடந்தது.


Next Story