`ஓ.பன்னீர்செல்வம் பதவிக்காக மவுன யுத்தம் தொடங்கினார்' முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி


`ஓ.பன்னீர்செல்வம் பதவிக்காக  மவுன யுத்தம் தொடங்கினார்  முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
x

ஓ.பன்னீர்செல்வம் பதவிக்காக மவுனயுத்தம் தொடங்கினார் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்

தூத்துக்குடி

எட்டயபுரம்:

ஓ.பன்னீர்செல்வம் பதவிக்காக மவுனயுத்தம் தொடங்கினார் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

பொன்விழா

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் அ.தி.மு.க. 50-வது ஆண்டு பொன்விழா, முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. பிறந்தநாள் விழா அங்குள்ள திருமண மஹாலில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மகளிர் அணி பொறுப்பாளர் சுப்புலட்சுமி சந்திரன் தலைமை தாங்கினார். எட்டயபுரம் அ.தி.மு.க. நகர செயலாளர் ராஜகுமார் வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு சான்றிதழ், விருது வழங்கி கவுரவித்தனர். மேலும் நலத்திட்ட உதவிகளும் வழங்கினர். கேக் வெட்டி கொண்டாடினர்.

பேட்டி

பின்னர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் 7 முறை தனது நிலைப்பாட்டினை ஓ.பன்னீர்செல்வம் மாற்றியுள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சர் பதவி ஏற்றார். அதன்பிறகு ராஜினாமா செய்தார். பின்னர் தர்மயுத்தம் தொடங்கினார். தி.மு.க.வுடன் இணைந்து சட்டமன்றத்தில் அ.தி.மு.க.விற்கு எதிராக வாக்களித்தார்.

மவுனயுத்தம்

எதிர்கட்சி தலைவர் பதவி யாருக்கு என்று வந்தபோது வழக்கம்போல ஓ.பன்னீர்செல்வம் மவுன யுத்தத்தினை தொடங்கினார். எப்போதெல்லாம் தனக்கு பதவி கிடைக்கவில்லையோ அப்போதெல்லாம் மவுன யுத்தத்தினை தொடங்குவார். அதற்கு பெயர் தர்மயுத்தம் என்று சொல்வார். ஓ.பன்னீர்செல்வம் மவுனமாக தொடங்கும் யுத்தம், தர்மயுத்தம் அல்ல. அது துரோக யுத்தம்.

எப்போதெல்லாம் தன் பதவிக்கு ஆபத்து வருகிறதோ, அப்போதெல்லாம் கட்சிக்கு ஆபத்து போன்ற மாயத்தோற்றத்தினை ஓ.பன்னீர்செல்வம் உருவாக்குவார். அவருடைய யுத்தங்கள் தோல்வியில் தான் முடிந்துள்ளது.

இ்வ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் ஊராட்சி குழு தலைவி சத்யா, மகளிர் அணி ரத்தினம், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாநில இணைச்செயலாளர் சீனி ராஜீ, அ.தி.மு.க. புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் தனவதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story