பெண் டாக்டரிடம் 2-வது நாளாக மருத்துவக்குழுவினர் விசாரணை


பெண் டாக்டரிடம் 2-வது நாளாக மருத்துவக்குழுவினர் விசாரணை
x

வாழப்பாடியில் திருமணமாகாமல் கர்ப்பமான 17 சிறுமி பிரசவத்திற்கு பெண் திடீரென இறந்த சம்பவத்தில், அந்த சிறுமிக்கு பிரசவம் பார்த்த பெண் டாக்டரிடம் 2-வது நாளாக மருத்துவக்குழுவினர் விசாரணை நடத்தினர். கொரோனா பரிசோதனைக்கு போலீசார் அழைத்ததால் அந்த பெண் டாக்டர் மயங்கி விழுந்தார்.

சேலம்

வாழப்பாடி

வாழப்பாடியில் திருமணமாகாமல் கர்ப்பமான 17 சிறுமி பிரசவத்திற்கு பெண் திடீரென இறந்த சம்பவத்தில், அந்த சிறுமிக்கு பிரசவம் பார்த்த பெண் டாக்டரிடம் 2-வது நாளாக மருத்துவக்குழுவினர் விசாரணை நடத்தினர். கொரோனா பரிசோதனைக்கு போலீசார் அழைத்ததால் அந்த பெண் டாக்டர் மயங்கி விழுந்தார்.

பிரசவத்திற்கு பின் சிறுமி சாவு

சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன், இந்திராநகரை சேர்ந்த அந்த சிறுமியின் உறவினரான ஒரு வாலிபர் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிறுமி கர்ப்பமானார். இதையறிந்த அந்த சிறுமியின் பெற்றோர், வாழப்பாடியில் உள்ள டாக்டர் செல்வாம்பாள் ராஜ்குமார் என்பவரின் தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த போது 7 மாத கர்ப்பமாக இருப்பதால் கருவை கலைக்க முடியாது என்பதால் அவருக்கு பிரசவம் பார்க்க, டாக்டர் செல்வாம்பாள் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த சிறுமிக்கு அங்கு பிரசவம் நடந்தது. அதில் அந்த சிறுமிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தையை பிரசவித்த பிறகு சிறுமிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே அந்த சிறுமியை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

அதே நேரத்தில் வாழப்பாடியில், ஆஸ்பத்திரியில் சிறுமிக்கு பிறந்த குழந்தை இறந்துவிட்டதாக கருதி பிளாஸ்டிக் தொட்டியில் வீசப்பட்ட நிலையில் சுமார் 10 மணி நேரம் கழித்து அந்த குழந்தை உயிருடன் இருப்பதை கண்டறிந்த போலீசார் அந்த குழந்தையை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

2-வது நாளாக விசாரணை

இந்த சம்பவம் தொடர்பாக வாழப்பாடி அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் ஜெயசெல்வி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த வாழப்பாடி போலீசார் மற்றும் சேலம் மாவட்ட மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் வளர்மதி, வாழப்பாடி அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் ஜெயசெல்வி, பேளூர் வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் உள்ளிட்ட குழுவினர், பெண் டாக்டர் செல்வாம்பாளிடம் நேற்று முன்தினம் தீவிர விசாரணை நடத்தினர். இந்த நிலையில் நேற்றும் 2-வது நாளாக அந்த டாக்டரிடம் மருத்துவக்குழுவினர் தீவிர விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் டாக்டர் செல்வாம்பாள் ராஜ்குமாருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்று போலீசார் கூறியதால் திடீரென மயங்கி விழுந்தார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த வாழப்பாடி போலீசார் வாழப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் அந்த டாக்டருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

டாக்டர் செல்வாம்பாள் ராஜ்குமார் மீது என்னென்ன பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய உள்ளோம் என்பதை சேலம் மருத்துவக்குழுவினரின் விசாரணை அறிக்கை வந்தபின்னரே முடிவு செய்யப்படும் என வாழப்பாடி போலீசார் தெரிவித்தனர்.


Next Story