"முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னை எதிரியாக நினைப்பது பெருமைதான்" - எஸ்.பி வேலுமணி பேச்சு


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னை எதிரியாக நினைப்பது பெருமைதான் - எஸ்.பி வேலுமணி பேச்சு
x

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னை எதிரியாக நினைப்பது பெருமைதான் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி கூறினார்.

கோவை,

கோவை பி.கே புதூர் பகுதியில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூடடம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் நடந்த கூட்டத்தில், அதிமுக கொள்கை பரப்பு துணைசெயலாளர் நடிகை விந்தியா உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

விழா மேடையில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில் வெற்றிபெற்றதால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு என் மீது கோபம். கோவையில் திமுக ஆட்சி அமைந்த பிறகு ஏதுனும் புதிய திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதா?.

மூன்று முறை எனது வீட்டில் சோதனை நடத்தி விட்டார்கள். சோதனையில் மூலம் தொந்தரவு செய்கின்றனர். என் மீது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு என்ன கோபம்?, இருந்தாலும் ஒரு பெருமையாக உள்ளது. எனென்றால் என்னை எதிரியாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைப்பது பெருமைதான் என்று தெரிவித்துள்ளார்.


Next Story